Skip to main content

Posts

Trending Post

Hi Hello How are You

Gf
Recent posts

Processes of motivation - ஊக்கப்படுத்துதலின் செயல்முறைகள்

முன்னுரை : மேலாண்மை என்பது நிறுவனத்தின்  நோக்கங்களை அடைவதற்காக ஒவ்வொரு  நபரும் இணைந்து குழுவாக செயல்படக்கூடிய சூழலை உருவாக்குதல் மற்றும் அதனை தக்க வை த்துக் கொள்வ துமாகும் . நிர்வாகம் ஊழியர்களை ஊக்குவிப்பதன்  மூலம் தன் பணியை திறமையாக செயலாற்றுகிறது. இதற்கு நிறுவனம்  தன் ஊழியர்களை ஊக்குவிக்கும்  காரணிகளை அறிந்துகொள்ளவேண்டும்.  திறமையான ஊக்கத்தின் வெற்றி என்பது ஒப்புக்கொள்ளப்படுகின்ற ஆணை மட்டுமன்றி திறமையாகவும் சிறப்பாகவும் செயல்படுத்தப்படுகின்றதா என்பதை பார்க்கும்  உறுதிப்பாடுமாகும். எனவே நிறுவனம்  ஊழியர்கள் நிறுவனத்திற்காக உழைக்க  ஊக்கிகளை வழங்கவேண்டும். ஊக்கப்படுத்துதலின் பொருள் : ஊக்கப்படுத்துதல் என்பது ஒரு  செயலைச் செய்வதற்கான காரணம்  என்னும் பொருள் கொண்ட’ஊக்கு காரணி”என்னும் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.  ஊக்கம் என்பது திசை, தீவிரம் மற்றும்  தொடர்ச்சியான இருப்புடைய தன்னார்வ நடத்தை போன்றவற்றை பாதிக்கும்  ஒரு நபரின் உள்ளிருக்கும் விசைகளின்  தொகுப்பு.  முழுமையான உந்துதல்கள், ஆசைகள், தேவைகள், விருப்பங்கள் மற்றும்  ஒத்த விசைகளுக்கு பொருந்தக்கூடிய  பொதுவான கருத்தியல் சொல்  ஊக்கப்படுத்து

Consequences of British Rule Important Case Study For Tnpsc Exams - PR220

அறிமுகம் : முகலாயப் பேரரசின் வீழ்ச்சியோடு மைய அதிகாரம் நொறுங்கியதால் ஓர் ஆங்கிலேய வணிக  நிறுவனம் இந்தியாவை கையகப்படுத்தும் நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஆங்கிலேய கிழக்கிந்தியக்  கம்பெனியின் நோக்கம் நிர்வாகம் செய்வது அல்ல; மாறாக அது சிக்கலில்லாமல் வியாபாரம்  புரிவதாகவே இருந்தது. எனினும், வங்காளத்தில்  1770இல் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்திற்குப் பின் சற்றே அதிகாரத்தை பொறுப்புணர்வு கொண்டதாக அவர்கள் மாற்றினர். ஒருபுறம் பாரபட்சமான  சுரண்டல் பொருளாதாரக் கொள்கையைக் கடைபிடித்தபோதும், அவர்கள் தாங்கள் ஆண்ட  மக்களின் பாதுகாப்பையும் அவர்களின் நீதி  நடைமுறைகளையும் காக்க முயல்வதாகப்  பறைசாற்றிக் கொண்டார்கள். பாரம்பரிய அரசாட்சி சர்வாதிகாரக் கொடுமையை உள்ளடக்கியதாக  இருப்பதாலும், எதிர்பாராத படையெடுப்புகளாலும் கள்வர்களாலும் மக்கள் இன்னல் அனுபவிப்பதாலும்  தங்களின் அதிகாரம் விரிவடைவது தவிர்க்க முடியாததென நியாயப்படுத்திக் கொண்டார்கள்.  இருப்புப்பாதை ஏற்படுத்தியதும், தந்தி தொடர்பு  முறையும், எதிர்ப்புகளை ஒடுக்கவும், உள்ளூர்  மக்களை எளிதாகக் கட்டுப்படுத்தவும் உதவின. ஆங்கிலேயரின் விவசாய, வணிகக் கொள்கைகள்  இந்தியப்

Under British rule Early Protests Indian Culture History - PR220

அறிமுகம் : ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி பலருடைய ஆட்சிப்பகுதிகளை வெற்றி கொண்டதும் தங்களது எல்லையை விரிவுப்படுத்திக்கொண்டே போனதும் தொடர்ச்சியான பல கிளர்ச்சிகளுக்கு  வழிவகுத்தன. அவர்களால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மன்னர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள், தங்கள் ஆட்சிப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜமீன்தார்கள் ,  பாளையக்காரர்கள் ஆகியோரால் இத்தகையை கிளர்ச்சிகள் ஏற்பட்டன. வரலாற்றாசிரியர்கள்  இதைத் தொடக்கநிலை எதிர்ப்பு என்று குறிப்பிடுகிறார்கள். உடைமைகள் பறிக்கப்பட்ட விவசாயிகள், பழங்குடிகள் ஆகியோரின் எழுச்சியும் இத்தகைய கிளர்ச்சிகளையொட்டித்  தோன்றின. வேளாண் உறவுகளிலும், நில வருவாய் முறையிலும், நீதி நிர்வாகத்திலும் ஆங்கிலேயர் செய்த மிக விரைவான மாற்றங்கள் பற்றி முந்தையபாடம் விரிவாகக் கூறியுள்ளது. இம்மாற்றங்கள் வேளாண் பொருளாதார அமைப்பில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தின. சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த மக்களும் அவதிப்பட்டார்கள். எனவே, மனக்கொதிப்பில் இருந்த இந்திய ஆட்சியாளர்கள் கலகத்தில் இறங்கியபோது, அவர்களுக்கு விவசாயிகள்,  கைவினைஞர்கள் ஆகியோரின் ஆதரவும் இயல்பாகவே கிடைத்தது. அக்காலகட்ட

Indian Social and Religious Reform Movements and Indian Culture - PR220

அறிமுகம் : கி.பி.(பொ.ஆ.) 7-ஆம் நூற்றாண்டு முதல் 17-ஆம் நூற்றாண்டுவரை இந்தியாவில் பக்தி  இயக்கங்கள் தோன்றின. இவ்வியக்கங்கள் இடைக்கால இந்திய வரலாற்றில் சமூக மற்றும்  சமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்காற்றின. இதன் தொடர்ச்சியாக வங்காளத்தில்  சமூக�சமயச் சீர்திருத்த இயக்கம் இராஜாராம் மோகன்ராய் என்பவரால் தொடங்கப்பட்டு,  அதன்பின் இந்தியா முழுவதும் பல சீர்திருத்த இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டு, சமூக - சமய,  மறுமலர்ச்சிக்கு வித்திட்டன இந்தியாவின் நிலை : ஆங்கிலேய ஆட்சியில் இந்திய அரசர்களுக்கிடையே நிருவாகத்தில் பல சீர்கேடுகள் காணப்பட்டன. இந்தியர்கள் மேலை நாட்டு நாகரிகத்தைப் பின்பற்றினர். கிறித்துவ சமயப்பரப்புக் குழுவினர்களும், இந்திய ஆட்சியாளர்களும், இந்தியரின் மொழிகளையும், இலக்கியங்கள், பண்பாடு, கலைக ள் போன்ற வற்றைப் போற்றினர். ஆனால், அதன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை .18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் சமூகநிலை உலக நாடுகளுக்கிடையில் பின்தங்கியிருந்தது. குறிப்பாக அரசியல்,  பொருளாதார , சமூக,சமய, பண்பாடு, இலக்கியம், கல்வி போன்ற துறைகளில் வளர்ச்சி பெறவில்லை , ஏற்கெனவே இருந்த வளர்

Yoga inspires Ethics of Life and Types Of Yoga's In Indian Culture - PR220

 அறிமுகம் : இயற்கையிலேயே மனிதனுக்கு இறைவனை நோக்கிய உந்துதல் உள்ளது.  அதனை நமது முன்னோர்களாகிய  யோகிகளும், ஞானிகளும், முனிவர்களும்  முறைப்படுத்தி, நமது பாரதத் திருநாட்டிற்கு மட்டுமல்லாது உலகத்திற்கே இறைநெறியில்  வாழ அளித்திருக்கும் கொடைதான் யோகா . ஞானிகளும் யோகிகளும் முனிவர்களும்  மனிதப் பிறவிப்பயனை, மக்கள் அடையும் நிலைகளை , யோக முறையில்  வடிவமைத்துத் தந்துள்ளனர் . யோகா என்பது, முனிவர்களுக்கும் ஞானிகளுக்கும் மட்டுமே உகந்தது என்ற கருத்து மாறித் தற்போது உலகிலுள்ள அனைத்து சமயத்தைச் சார்ந்த மக்களாலும் பின்பற்றப்படும் வாழ்வியல் கலையாக மிளிர்ந்துள்ளது யோகா - பொருள் : யோகா என்ற சமஸ்கிருத சொல்லானது யுஜ் (YUJ) என்ற சொல்லிருந்து தோன்றி யோக் (YOKE) என்ற சொல்லாக மாறி இறுதியில் “யோகா ” (Yoga) எனப் பெயர்பெற்றது. யுஜ் மற்றும் யோக் என்ற சொற்கள் “இணைத்தல்” என்று பொருள்படுகின்றன .இதில்இணைத்தல் என்பது உடலையும் மனத்தையும் இணைத்தல் முதல் நிலை  உடலையும் உயிரையும் இணைத்தல் இரண்டாம் நிலை  உயிரையும் இறைவனையும் இணைத்தல் மூன்றாம் நிலை யோகா பொருள்  பதஞ்சலி முனிவரின்கூற்றுப்படி யோகா என்பது, “யோகஹ சித்த விருத்தி நிர

Indian Culture Development Ethics Important Lines and Questions - PR220

அறிமுகம் : நமதுநாடு பழைமையான பண்பாட்டைத் தன்னகத்தே கொண்டுள்ளது. வாழ்வியல்  முறைகள், இலக்கியம், கணிதம், வானவியல், இசை, ஓவியம், நடனம், சிற்பம், கட்டடக்கலை போன்றவற்றில் உலகிற்கு முன்னோடியாகத் திகழ்கிறது. தே சிய ஒருமைப்பாட்டை  மையப்படுத்தும், ஆன்மிக உணர்வு, இந்தியாவின் பலம் என சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். “உலகப்பொதுமறை“ என்றழைக்கப்படும் திருக்குறள் , தமிழர்  வாழ்வியல் மற்றும் பண்பாட்டு நெ றிகளைக் கூறும் சங்க இலக்கியம், இராமாயணம்,  மகாபாரதம், கௌதம புத்தர் தோற்றுவித்த பௌத்தசமயம் போன்றவை , உலகிற்கு  இந்தியா வழங்கிய அளப்பரிய பண்பாட்டுக் கொடையாகும் இந்தியப் பண்பாட்டின் மேன்மைகள் : இந்தியப் பாரம்பரியத்தின் உயரியப்பண்பு சகிப்புத்தன்மையும்  பன்முகத்தன்மையுமாகும். யூதர்கள் , கிறித்துவர்கள் , முஸ்லீம்கள் , பார்சிக்கள் போன்றோர் இந்தியாவில் குடியேறி, இந்தியப்பன்முகத்த ன்மையை ஏற்றுக்கொண்டு, இந்தியப்பண்பாட் டுடன் தம்மை இணைத்துக் கொண்டார்கள் . மதநல்லிணக்க அடிப்படையில்  அனைத்துச் சமயங்களிலுமுள்ள நல்ல கருத்துகளை ஏற்றுக் கொள்ளல், பிற சமயத்தினருக்கும் மதிப்பளித்தல் போன்ற உணர்வுகளை த் தன்னகத்தே கொண