Skip to main content

Tnpsc Tamil Old History Book Important Lines and One Mark Questions - PR220


அறிமுகம் :


பிற பண்பாட்டு மரபுகளைப் போலவே, மதமும் 

தனித்து இருப்பதில்லை. நிலவும் சூழ்நிலைகளோடு 

தன்னை தகவமைத்துக் கொண்டு மக்களின் சமூக, 

ஆன்மிகத் தேவைகளை மதமும் நிறைவு செய்கிறது.

நீண்ட பண்பாட்டு வரலாற்றைக் கொண்டிருக்கும் 

நாடான இந்தியாவில், மதங்கள் பல்வகைப்பட்ட 

மரபுகளோடுதொடர்புகொண்டு வளர்ந்துள்ளன. ஆரிய 

மொழி பேசிய மக்களின் வருகையோ டு இந்தியா

வந்த வேத மதம் சிந்து நாகரிகத்தின் பல கூறுகளை 

உள்வாங்கிக் கொண்டது. ஹரப்பாவில் தாய்த்

தெய்வ வழிபாடு தொடங்குகிறது. சிந்துவெளியில்

கண்டெடுக்கப்பட்ட ஒரு சிற்பம் சிவன் என

அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்திரன், வருணன்,

அக்னி ஆகியோரே முக்கிய வேதக் கடவுள்கள் ஆவர்.

சிவன், விஷ்ணு வழிபாடு பின்னர் வளர்ந்தனவாகும்.

பொது ஆண்டுக்கு முந்திய முதலாயிரமாண்டின் (கி.மு 

1000) இடைப்பகுதியில் சிந்து கங்கைச் சமவெளியில் 

பௌத்தம், சமணம் எனும் இரு மகத்தான மதங்கள் 

உருவாயின. (ஆசீவகம் போன ்ற ஏனைய 

புறக்கோட்பாட்டு மதங்கள் போன்றே ) இவை வைதீக 

வேதமத நடைமுறைகளை எதிர்த்தன.

இதைப் போலவே பொது ஆண்டின்

முதலாயிரமாண்டின் இடைப்ப குதியில் நாட்டினதென்பகுதியில் பக்தி இயக்கம் எனும் வடிவத்தில்

ஓர் உன்னதமான சமய மரபு செழித்தோங்கியது. 

ஒரு மதக் கோட்பாடான, பக்தியின் பொருள் ஆழமான

பற்றுடன் அனை த்துக்கும் மேலான இறைவனை ச் 

சரணடைந்து முக்தி பெறுதலாகும். பகவத்கீதை

போன்ற மத நூல்கள் பக்திக்கான பாதை அல்லது

பக்தி மார்க்கத்தைப் பற்றி பேசியதாலும் இவ்வியக்கம் 

வலுப்பெற்றது. இக்காலப் பகுதியில்தான்

பௌத்தம், சமணம் ஆகியவற்றின் ஒழுக்கநெறி, 

கடவுள் மறுப்புக் கோட் பாடுகளுக்கு எதிராகவே

இவ்வியக்கம் தோன்றியது என வரலாற்றறிஞர்கள்

வாதிடுகின்றனர். வேத இறையியல், இவை

இரண்டிலிருமிருந்தும் சில கூறுகளை எடுத்து 

இணைத்துக் கொண்டது. ஆதிசங்கரர் புறமதக் 

கோட்பாடுகளை எதிர்கொள்ளும் பொருட்டு இந்து 

மதத்திற்கு ‘அத்வைதம்’ எனும் தத்துவக் கோட்பாட்டை

வழங்கினார். அது அறிவார்ந்தவர்க ளின்

நிலையில் செல்வா க்குப்பெ ற்றது. புகழ்பெற்ற சைவ

நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் 

உள்ளத்தை உருக்கும் பாடல்களால் பக்திக் 

கோட்பாட்டிற்கு ஒரு வடிவம் கொ டுத்து மக்களின்

ஆதரவைப் பெற்றனர். வரலாற்றாய்வாளர்கள்

இதனைப் பக்தி இயக்கம் என அழைக்கின்றனர்.

பக்தி இயக்கம் அரச ஆதரவோடு சமூக, அரசியல்,

மதம், பண்பாடு, மொ ழி ஆகிய தளங்களில் மிகஆழமான, நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. 

இவ்வாறு தென்னிந்தியா 7ஆம் நூற்றாண்டிலிருந்து 

10ஆம் நூற்றாண்டு வரை மத மறுமலர்ச்சியின்

இல்லமாக விளங்கியது. இராமானுஜர் போன்ற

இறையியலாளர்களால் அது பதினோராம்

நூற்றாண்டில் ஒரு தத்துவ, சித்தாந்த இயக்கமாக

மறுவடிவம் கொண்டது. பக்தி வழிபாடு அடியார்கள் 

கொடுத்த ஊக்கத்தினால் 14ஆம் நூற்றாண்டில்

இந்தியா முழுவதிலும் பரவியது. நாம் இங்கு பக்தி 

இயக்கத்தின் பொதுவான கூறுகளையும் அதை

முன்னெடுத்த முக்கியமானவர்க ளையும், அதன்

இருவகையான போக்குகளையும் மக்களின் சமூகப் 

பண்பாட்டு வாழ்வில் அது ஏற்படுத்திய தாக்கத்தையும்

பகுத்தாய்வு செய்ய உள்ளோம


தென்னிந்தியாவில் பக்தி வழிபாடு :


ஒரு பழங்குடிச் சமூகம்  நன்கு கட்டமைக்கப்பட ்ட

சமூகமாக மாற்றம்  பெ றும் பொழுதும்

அதிகாரமிக்க முடியாட்சி  முறையிலான நிர்வாகமுறை

உருவாகும்போதும் தனது  அதிகாரத்தை நியாயப்ப டுத்திக்கொள்ள அதற்கு

ஏதாவது ஒரு மதத்தை ஆதரிக்க வேண்டிய தேவை

ஏற்படுகிறது. பௌத்தமும் சமணமும் பெரும்பாலும் 

வணிக வர்க்கத்தினரால்ஆதரிக்கபட்டன. அரசுகளும் 

அவற்றை ஆதரித்தன. பக்தி இயக்கம் நிலவுடைமைச் 

சாதிகளிடையேயிருந்து தோன்றியதால் அது 

பௌத்தத்தையும் சமணத்தையும் விமர்சனம்

செய்தது. இதன் விளைவாக அரசர்களின் ஆதரவைப் 

பெறுவதில் மோதல்கள் ஏற்பட்டன. பக்தியான து 

சாதி, பாலின வேறுபாடுகளின்றி அனைவ ராலும்

அணுக இயலும் என்ற நிலையை ஏற்படுத்தியதன்

மூலம் சமணமும் பௌத்தமும் பிராமணர்க ளின்

அதிகாரத்தை எதிர்த்தன.


பௌத்த மற்றும் சமணத்தோடு மோதல் :


சான்றுகள்: பக்தி இலக்கியங்கள், பெரும்பாலும் 

புராணங்கள், திருத்தொண்டர்களைப் பற்றிய

வரலாற்று நூல்கள் ஆகியவை தமிழகத்தில்

நடைபெற்ற மத மோதல்கள் குறித்த செய்திகளை 

வழங்குகின்றன. தேவா ரமானது அப்பர் 

(திருநாவுக்கரசர்) சம்பந்தர் (திருஞான சம்பந்தர்)

சுந்தரர் ஆகிய மூவரால் எழுதப்பட்டப் பாடல்களைக் 

கொண்டவை. இவை மூன்றும் சேர்ந்து பன்னிரு 

சைவத் திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகளாக 

இடம் பெறுகின்றன. மாணிக்கவாசகரின் பாடல்கள் 

எட்டாவது திருமுறை ஆகும். இவற் றில் பல 

பாடல்கள் பௌத்தர்களையும் சமணர்களையும் 

பற்றிய விமர்சனங்களை விவரிப்பவையாகும். 

அறுபத்துமூன்று நாயன்மார்க ளைப் பற்றி கூறும் 

சேக்கிழாரின் பெரியபுராணம் பக்தி இயக்கம்

குறித்த முக்கியச் சான்றாகும். வைணவ

அடியார்களான ஆழ்வார்களின் பாடல்கள் நாலாயிர 

திவ்வியப்பிரபந்தமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பக்தி 

இயக்கப் பாடல்களின் முக்கியத்துவம் யாதெனில்

அவை இன்றுவரை மக்களால் படிக்கப்படுகின்றன, 

பாடப்படுகின்றன, வணங்கப்படுகின்றன. அவை

தமிழ் இலக்கிய மரபின் முக்கியப் பகுதியாகவும்

விளங்குகின்றன.

ஆரம்ப கால மோதல்கள்

பல்லவர் காலத்தில்தான் முதன்முதலாகச் 

சைவமும் வைணவமும் ஒருபுறமாகவும் சிரமணப் 

பிரிவுகளான சமணம், பெளத்தம் மறுபுறமாகவும் 

இருந்து மோதிக்கொண்டன.

முதலாம் மகேந்திரவர்மப் பல்லவர் 

சமணத்தைப் பின்பற்றியதால் ஏனைய 

மதங்களைச் சேர்ந்தவர்களைத் துன்புறுத்தினார்.

அப்பர் தொடக்கத்தில் சமணராக, தர்மசேனன்

எனும் பெயருடனிருந்தார். பின்னர் தனது 

தமக்கையின் செல்வாக்கால் சைவமதத்தைத்

தழுவினார். சில சமணர்களால் தூண்டப்பட்ட 

மகேந்திரவர்மன் அப்பரை மீண்டும் சமணராக 

மாறும்ப டி வற்புறுத்தினார். அப்பர் மறுத்தபோது 

துன்புறுத்தப்பட்டார். முடிவில் மகேந்திரவர்மனே

சைவமதத்திற்கு மாறியபோது பிரச்சனை

முடிவுக்கு வந்தது. மரபுசார்ந்த ஒரு கதையின்படி சம்பந்தர் 

இறையியல் வாதங்களில் சமணர்களை

வென்றதால் தோற்றுப் போன சமணர்கள் கழுவில்

ஏற்றப்பட்டனர். கூன் பாண்டியன் எனவும் 

அறியப்பட்ட மாறவர்மன் அரிகேசரி (640-670) 

சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறிய பின்னர் 

சம்பந்தருடைய செல்வாக்கால் மீண்டும் 

சைவரானார். ஒரு சைவக் கதையின்படி

சைவத்திற்குத் திரும்பிய பின்னர் சமணர் பலரை

மதுரை மாவட்டத்திலுள்ள சமந்தம் என்னும் ஊரில்

கொல்லும்படி ஆணையிட்டதாகவும் தெரிகிறது.

சைவ சித்தாந்தம் போன்ற தத்துவ ஆய்வு 

நூல்கள் பௌத்த சமண தத்துவ மோதல்களை 

விரிவாக விளக்குகின்றன. சைவ சித்தாந்த

நூல்களில் ஒன்றான சிவஞானசித்தியாரில்

‘பரபக்கம்’ என்ற பெயரில் தனிப் பிரிவொன்றுள்ளது. 

அது பௌத்த சமண வாதங்களை முற்றிலுமாக

எதிர்க்கின்றது. பக்தி இலக்கியங்களும் 

திருத்தொண்டர்களைப் பற்றிய நூல்களும் 

மோதல்கள் ஏற்பட்ட நிகழ்வுகளையும் புறச்சமயத்தார் அவ்வாறான மோதல்கள் இறுதியில் வன்முறை

சார்ந்ததாக மாற்றம் பெற்று பல சமணத் துறவிகள் 

கழுவில் ஏற்றப்பட்டதில் முடிந்ததெனக் கல்வெட்டுச் 

சான்றுகள் கூறுகின்றன.

தத்துவம் சார்ந்த வாதங்கள் ஒரு பக்கம் 

நடைபெற்றாலும் பக்தி இயக்கம் மன்னர்

ஆதரவைப் பெற்றிருந்ததன் விளைவாக பௌத்தமும்

சமணமும் தோல்வியைச் சந்தித்தன . பதினோராம்

நூற்றாண்டில் இவ்விரு மதங்களும் முற்றிலுமாகத்

தோற்கடிக்கப்பட்டன. பௌத்தம் தமிழகத்திலிருந்தும் 

இந்தியாவிலிருந்தும் முற்றிலுமாக த் 

துடைக்கப்பட்டாலும் தமிழ்மொழி பேசுகின்ற

சமணர்கள் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில்

இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர். சமண பௌத்த

கோவில்களும் கருவறைகளும் பெரும்பாலும்

சிதைக்கப்பட்டன, அல்லது பயன்பாட்டில் இல்லாமல்

ஆயின. கலைப்பொருட்கள் பல புறக்கணிக்கப்பட ்டன

அல்லது கொள்ளை போயின. இன்றைய அளவிலும்

தமிழ்நாட்டின் பலபகுதிகளில் தலைப்பகுதி 

உடைக்கப்பட்ட புத்தர், சமணத்தீர்த்தங்கரர்

சிலைகளைக் காணமுடிகிறது.

இவ்வாறு இருந்தபோதிலும் வைதீகமும்

புறச் சமயங்களும் ஒன்றோடொன் று கருத்து 

பரிமாற்றம் செய்துகொண்ட அடையாளங்களும் 

காணப்படுகின்றன. பௌத்தம், சமணம் ஆகியவற்றின்

மையக்கருத்தான துறவறத்தை சைவமும்

வைணவமும் ஏற்றுக்கொண்டன. பௌத்தம்,

வைணவம் ஆகிய இரண்டும் எளிமையையும் உலக 

சுகங்களை மறுப்பதையும் முன்னிறுத்தியபோது பக்தி 

இயக்கம், விழாக்கள், சடங்குகள் எனவாழ்க்கையைக்

கொண்டா டியது. சைவ உணவு, கொல்லாமை

ஆகிய மதிப்பு வாய்ந்த நெறிகளும் பரஸ்பர 

செல்வாக்கின் விளைவாக ஏற்பட்டு இருக்கலாம்.

புறச் சமயங்கள் வடமொழியான பிராகிருதத்தை ப்

பயன்படுத்தியதற்கு எதிர்வினையாக தமிழ்மொழிக்கு 

மேலதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டது. பௌத்தமும்

சமணமும் ஊழ்வினைக் கோட்பாட்டை பேசியபோது

பக்தி இயக்கத்தை விளக்கியவர்கள் சிவனையும்

விஷ்ணுவையும் சரணடைவதன் மூலம் விதியை

வெல்லமுடியும் எனக் கூறினர். 

பௌத்தம், சமணம் ஆகியவற்றுடன்

ஏற்பட்ட மோதலின் விளைவாக வேதமதங்கள் சில 

மாறுதல்களுக்கு உள்ளாயின


பக்தி இயக்கம் வடஇந்தியாவில் பரவுதல் :


வைணவப் புலவர்களா லும் அடியார்களாலும்

தத்துவத் தளத்திற்குக் கொண் டு செல்லப்ப ட்டு

விளக்கப்பட்டது. இராமானுஜர் விசிஷ்டாத்வைதம்

என்னும் தத்துவத்தை உருவாக்கினார். அவருடைய 

போதனைகள் பரமாத்மாவும் ஜீவாத்மாவும் 

இரண்டல்ல ஒன்றே என்ற ஆதி சங்கரரின் கருத்தை

மறுத்தன. தமிழகத்தில் பக்தி இயக்கம் ஏழாம்

நூற்றாண்டிலேயேசெழித்தோங்கி இருந்தநிலையில்

வடஇந்தியாவில் பதினைந்தாம் நூற்றாண்டில்தான்

அது முழு வேகத்தை ப் பெற்றது. இக்காலத்தில்

பெரும் எண்ணிக்கையில் பக்திப் பாடல்கள் 

எழுதப்பட்டன. சாதியை அடிப்படையாகக் கொண்ட 

பிரிவினைகள், ஒதுக்கி வைத்தல் , பல கடவுள்களை 

வணங்கும்முறை, உருவ வழிபாடு போன்றவற்றால்

ஏற்பட்டிருந்த சமூகப் பின்னடைவுகளுக்கு எதிராக

வட இந்தியாவில் பக்தி இயக்கம் குரல் கொடுத்தது.

மதச் சான்றோர்கள் மூடநம்பிக்கைகளையும் 

தேவையற்ற சடங்குகளையும் விமர்சித்தனர்.


சூபியிஸத்தின் தாக்கம :


இந்து மதத்தில் தோன்றிய பக்தி இயக்கத்திற்கு

இணையாக இஸ்லாம் மதத்தில் அதைப் போன்ற

கருத்துக்களை சூபியிஸம் கொண்டிருந்தது.

சூபி, வாலி, தர்வீஷ், பக்கீர் ஆகிய பெயர்கள் 

இஸ்லாமிய ஞானிகளைக் குறிப்ப தாகும். இவர்கள் 

தியானம், யோகப் பயிற்சிகள், துறவறம், தியாகம் 

போன்றவற்றின் மூலம் உள்ளுணர்வைப் பெருக்கி

இறை நிலையை உணர்ந்தவர்களாவ ர். 12ஆம் 

நூற்றாண்டில் இஸ்லாமியரின் சமூக வாழ்வில்

சூபியிஸம் செல்வாக்குப் பெற்றசக்தியாக விளங்கியது.

சூபியிஸம் இஸ்லாமின் உள்ளுணர்வு 

சார்ந்த உள்முகமான, ஆச்சரியமான மற்றொரு

பக்கமாகும். மதம், சமூக வேறுபாடுகள் என்ற

எல்லைகளைத் தாண்டி சூபிகள் ஒட்டுமொத்த

மனித குலத்தின் மேம்பாட்டிற்காகப் பணிசெய்தன ர் 

தத்துவ ஞானிகளான இவர்க ள் தங்கள் பரந்த

மனப்பான்மைக்காகப் பெயர் பெற்றனர். இறைவனை

அனைத்துக்கும் மேலானஅழகின்உச்சம் எனசூபிகள் 

கருதினர். அவ்வழகைக் கண்டு ஆச்சரியப்படல்

வேண்டும், அதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுதல்

வேண்டும், முழுக்கவனத்தையும் இறைவன்மேல்

குவித்தல் வேண்டும் என்றனர். அவர்க ள் கடவுளை

மஸ்க் (நேசிக்கப்பட வேண்டியவர்) என்றும் தங்களை 

ஆசிக் (நேசிப்பவர்கள்) என்றும் நம்பினர். பின்னாளில்

சூபியிஸம் பல பிரிவுகளைக் கொண்டதாக மாறியது. 

சிஸ்டி, சுரவார்டி, குவாதிரியா, நஸ்பந்தி ஆகியன

முக்கியப் பிரிவுகளாகும்.

சூபியிஸம் நகர்ப் புறங்களிலும் 

கிராமப்புறங்களிலும் வேர்கொண்டது. சமூக, 

அரசியல், பண்பாட்டுத் தளங்களிலும் தாக்கத்தை

ஏற்படுத்தியது. சூபியிஸம் அனைத்து விதமான

மதச்சம்பிரதாயம், பழமைவாதம் வெளிவேடம்

ஆகியவற்றை எதிர்த்தது. ஆன்மீகப் பேரின்ப

நிலையை மட்டும் இலக்காகக் கொண்ட புதிய உலக 

ஒழுங்கை உருவாக்க ஆசை கொண்டது. அரசியல்

அதிகாரத்திற்காக மோதிக்கொள்வதே இயல்பாக

இருந்த ஒரு சூழலில், போர்களா லும் போட்டிகளால்

சூழல் பாழ்பட்டுக்கிடந்த நிலையில் சூபிகள் 

அமைதியையும் மகிழ்ச்சியையும் நிலைநாட்டப்

பணியாற்றினர். சூபிகளின் மகத்தான பங்களிப்பு 

இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே வெறுப்பின் கூரிய முனைகளை மழுங்கடித்து 

அவர்களிடையே சகோ தரத்துவத்தை யும்

ஐக்கியத்தையும் ஏற்படுத்தியதாகும் 

வைணவ பக்தி இயக்கத் தோடு இணைந்து ஒரு 

கடவுள் கோட்பாட்டை முன்வைத்தவர்கள் அன்றைய

அளவில் முக்கிய மதங்களா கத் திகழ்ந்த வைதீகம், 

இஸ்லாம் ஆகியவற்றிலிருந்து விலகி சுதந்திரப் 

பாதையைப் பின்பற்றினர். இவ்விரு மதங்களிலிருந்த

மூடநம்பிக்கைகளையும் பழமைவாதத்தை யும்

விமர்சித்தனர். துருக்கியப் படையெடுப்போடு கூடிய 

இஸ்லாமின் வருகை வேத மதங்களுக்கும்

குருமார்களுக்கும் பெரும் சவாலாகத் திகழ்ந்தது.

பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் இஸ்லா ம்

இந்தியாவின் பல பகுதிகளில் பரவியது. அதிகமான

இந்தியர்கள் முஸ்லீம்களாயினர். இஸ்லா ம் அரசு 

அதிகாரத்தோடு சமத்துவத்தை முன்வைத்தது 

இந்தியச் சமூகத்தில் கீழ்நிலையில் இருந்தோரைக் 

கவர்ந்தது. புதிய அரசியல் சமூகச் சூழல்

பிரதான மதங்களின் சட்டதிட்டங்களை

ஏற்றுக்கொள்ளாதவர்களை ஓர் இயக்கமாக்கியது. 

இவ்வியக்கம் சாதி முறைக்கு எதிரானதாகவும், 

வேதங்களுக்கும் புராணங்களுக்கும் 

எதிரானதாகவும் உருவானது. பண்பாட்டுத் 

தளத்திலும் இவ்வியக்கம் பிராந்திய மொழிகளின்

வளர்ச்சி இந்துஸ்தானி இசையின் வளர்ச்சி போன்ற

தாக்கங்களை ஏற்படுத்தியது.

முஸ்லீம்களின் அரசியல் அதிகாரத்திற்கு 

எதிரான இந்துக்களின் எதிர்வினை பன்முகத்

தன்மை கொண்டதாய் இருந்த து. ஒருபுறம் 

புதிய மதத்திற்கு எதிராக வெறுப்பினைக் கொண்டிருந்தபோதும், புதிய சவா ல்களை வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைவான செய்திகளே கிடைத்துள்ளன. நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த இவர் இராமானந்தரின் சீடராக, அவரிடமிருந்து வேதாந்த த் தத்துவத்தை க் கற்றுக் கொண்டார் என்று சொல்லப்ப டுகிறது. பிரபலமான, தஸ்கிரா-இ-ஆலியா-இ-ஹிந்த் (இஸ்லாமிய துறவிகளின் வாழ்க்கை) எனும் நூல் அவரை சூபி துறவியான ஷேக் தகி என்பவ ரின் சீடராகச் சித்தரிக்கிறது. முற்போக்கான மதச் சிந்தனைகளைக் கொண்ட கபீர் இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களிலுள்ள பிரிவினை வாதங்களையும், குறுகிய மனப்பான்மைகளையும் எதிர்த்தார். இந்து சமூகத்தின் கீழ்த்தட்டுகளைச் சார்ந்த மக்கள் அவருடைய கருத்துக்களால் கவரப்பட்டனர். உருவ வழிபாடு, பல கடவுள் வழிபாடு, சாதிமுறை ஆகியன கைவிடப்பட வேண்டுமென உறுதிபடக் கூறினார். அதே சமயத்தில் இஸ்லாமிலிருந்த சம்பிரதாயங்களையும் கடுமையாக விமர்சித்தார். கடவுளின் மேல் உண்மையான பற்றுதலைக் கொண்டிருந்த அவர் இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிரிக்கும் தடைகளை உடைக்க முயன்றார். கடவுளை அடைய அவர் கண்டடைந்த பாதை கீழ்நிலையில் உள்ளோர்க்கும் மேல்நிலையில் உள்ளோர்க்கும் ஏற்புடையதாயிருந்தது. அவருடைய பாடல்கள் இன்றுவரை இந்தியாவின் பலபகுதிகளில் பாடப்பட்டுவருகின்றன.


Comments

Popular posts from this blog

Zompiercer v0.103 PC Games Download

Zompiercer v0.103 PC Games Download Zompiercer v0.103 PC Games Download Title: Zompiercer Genre: Action, Adventure, Indie, Early Access Developer: DDDimanN Publisher: DDDimanN Release Date: 3 Apr, 2020 About This Game Zompiercer is a first-person shooter in the world of zombie apocalypse, filled with dangerous uniquely mutated zombies craving your flesh. Travel by train, which has become a haven for you, equip living wagons and create new equipment to survive. System Requirements Minimum: Requires a 64-bit processor and operating systemOS: Windows 7 or higher (64-bit)Processor: 2.4 Ghz Dual Core CPUMemory: 6 GB RAMGraphics: 2 GB Dedicated MemoryDirectX: Version 11Storage: 2 GB available spaceSound Card: Sound Card: DirectX® Compatible Recommended: Requires a 64-bit processor and operating systemOS: Windows 7 or higher (64-bit)Processor: 3.0 Ghz Quad Core CPU or fasterMemory: 12 GB RAMGraphics: 4 GB Dedicated MemoryDirectX: Version 11Storage: 2 GB available spaceSou

Autodesk AUTOCAD LT 2021 (x64) Final + Crack Free Download

Description AutoCAD LT 2021 is designed to develop and detail 2D drawings. The program automates most of the stages of the project. A full set of 2D commands allows you to create drawings, modify them and release working documentation for projects.The program provides built-in support for DWG format and reliability of work, and also contains powerful tools to improve drawing performance.Thanks to this project files can be easily transferred to other specialists. In addition, you can customize the user interface of the program to fit your needs. System Requirements OS Microsoft® Windows® 7 SP1 with Update KB4019990 (64-bit only) Microsoft Windows 8.1 with Update KB2919355 (64-bit only) Microsoft Windows 10 (64-bit only) (version 1803 or higher) CPU Basic:2.5–2.9 GHz processor Recommended:3+ GHz processor Multiple processors:Supported by the application RAM: Basic: 8 GB / Recommended: 16 GB Display Resolution: Conventional Displays:1920 x 1080 with True Color Hig

InPixio Photo Studio Ultimate v10.01.0 + Keygen Free Download

InPixio Photo Studio Ultimate v10.01.0 + Keygen Free Download InPixio Photo Studio Ultimate v10.01.0 + Keygen Free Download Description Photo Studio describes exactly what our software is today: a fully-fledged editing program that lets you create your pictures in your way. We’re really excited about this new identity and hope you like the new name as much as we do. And rest-assured, the name might be changing but all the things our users love about Photo Clip are here to stay: Photo Studio 10 will still be a user-friendly photo editing software, full of fun content to help you create the perfect photos and photo montages. Read on to find out more about all the new features and improvements in Photo Studio 10. VirusTotal: Setup : https://www.virustotal.com/gui/file/7d42a6cb22ca51135b70319b37a954a881f22cddc63f60ed8d39b13a62f5b85c/detection Keygen : https://www.virustotal.com/gui/file/1888ddb3f5b96946c77d40c83d3452d566cecbe3a99db505fa8bb1374ee87d5d/detection Screenshot