Skip to main content

World History Important Questions and one Mark Questions For Tnpsc and UPSC -PR220

 


அறிமுகம் :


முதல் உலகப்போருக்குப் பின் கூட்டுப்

பாதுகாப்பை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட

பன்னாட்டு அமைப்பு தகர்ந்தது. 1939 செப்டம்பரில் 

ஐரோப்பா, மீண்டும் ஒரு பெரும் போரை

எதிர்கொண்டது. 1939 முதல் 1945 வரை

நடந்த போர், இதற்குமுன் 1914 முதல் 1918 

வரை நடந்த உலகப்போரை விஞ்சியதாக

இருந்தது. இதற்கு ஜப்பான் எடுத்த நிலைப்பாடும் 

முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். அதன் 

விளைவாக கடுமையான அளவிற்கு உயிரிழப்பும், 

பொருள் சேதமும், போர்செலவினங்களும் 

ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் 

காலனிய நாடுகளில் ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டு 

தேசியவாத கிளர்ச்சிகள் சூடுபிடித்தன. இதனால் 

ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் காலனியாதிக்க

நீக்கம் தொடங்கியது. தென்கிழக்கு ஆசியாவில், 

டச்சு ஒரு தோல்வியுற்ற போரை நடத்தியது, 

ஆனால் இறுதியாக முந்தைய டச்சு காலனி 

நாடாக இருந்த கிழக்கிந்தியத் தீவுகளான 

இந்தோனேசியாவுக்கு 1949இல் விடுதலை

அறிவிக்கப்பட்டது. இப்பாடம் இந்தோனேசியாவிலும், 

அமெரிக்க காலனியான பிலிப்பைன்ஸ் நாட்டிலும் 

ஏற்பட்ட முன்னேற்றங்களை அணுகுபொருளாக

எடுத்துவிளக்குகிறது. சீனாவில் ஊழல்வாதிகளும், 

திறமையற்றவர்களுமாக இருந்த தேசியவாதிகளை

மக்கள் புறந்தள்ளினார்கள். அங்கு நடந்த உள்நாட்டுப்

போரின் விளைவாகமாசே-துங்கின் தலைமையில் 

சீன மக்கள் குடியரசு உருவாக வழிவகுத்தது.


இரண்டாம் உலகப்போர்:காரணங்கள் :


போரின் துவக்கத்தில் பிரிட்டனும், பிரான்சும் 

ஜெர்மனியை எதிர்த்ததும் இத்தாலி துவக்கத்தில் 

நடுநிலைவகித்து பின் ஜெர்மனியை ஆதரித்ததும் 

கொடுத்த தோற்றமானது முதல் உலகப்போரின் இரு 

அணிகளை நினைவூட்டக்கூடியதாக விளங்கியது. 

குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால், 

ஜப்பான் மேற்கத்திய சக்திகளுக்குப் பதிலாக

ஜெர்மனியுடன் இணைந்தது. போர் தொடங்கி 

இரண்டு ஆண்டுகள் கடக்கும் வரை ரஷ்யாவும், 

அமெரிக்கா ஐக்கிய நாடும் எந்த ஒரு பிரச்சனையிலும் 

தலையிடவில்லை. இரண்டாம் உலகப்போரின் 

காலத்தில் போர்முறைகள் பெரும் மாற்றத்திற்கு 

உள்ளாகியிருந்தன. அகழியை அடிப்படை

உத்தியாக கொண்ட போர்முறை மறைந்து 

வான்வெளி குண்டு வீசும் முறை ஆக்கிரமித்தது. 

போருக்காக ஆயுதம் ஏந்தியோரையும், சாதாரண 

குடிமக்களையும் இரண்டாம் உலகப்போர்

பிரித்துப் பார்க்கத் தவறியது. அதனால் போரினால் 

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிக அதிகமாகவே

இருந்தது. 


பன்னாட்டு சங்கத்தின் (League of Nations) 
தோல்வி :


மற்றொரு போரைத் தவிர்க்கும் நோக்கோடு 

பன்னாட்டு அமைப்பாக உருவாக்கப்பட்ட

பன்னாட்டு சங்கம் காலப்போக்கில் வெற்றி 

பெற்றவர்களின் கூட்டணியானதோடு அது 

தோல்வியடைந்தவர்களுக்கு எதிரானதாகவும் 

தோன்றத் துவங்கியது. வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் 

கையெழுத்தானபோதே அடுத்த போருக்கான 

விதைகள் தூவப்பட்டன.  1918 முதல் 1933 வரையிலான காலத்தில் 

போரைத் தவிர்க்கும் எண்ணத்தோடு 

தொடர் மாநாடுகள் நடத்தப்பட்டது. ஐரோப்பிய 

சக்திகள் 1925இல் ஸ்விஸ் நாட்டின் நகரான 

லோக்கர்னோவில் கூடி பேசியபோது ஜெர்மனியும் 

பிரான்சும் வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தில் உள்ளபடி 

ரைன் எல்லையை மதித்து நடக்க ஒப்புக்கொண்டன. 

இதற்கு அடுத்ததாகப் பலவகையிலும் 

பாராட்டப்பட்டது 1928இல் கையெழுத்திடப்பட்ட

கெல்லாக்-பிரையாண்ட் (Kellogg-Briand) ஒப்பந்தம் 

ஆகும். அக்காலகட்டத்தில் பன்னாட்டு சங்கத்தில் 

அமெரிக்க ஐக்கிய நாடு உறுப்பினராகவில்லை

என்றபோதும் அது கூட்டத்தில் கலந்து கொண்டது. 

இவ்வுடன்படிக்கையின் விளைவாக உலக

நாடுகள் அனைத்தும் ‘போரை கைவிடுவது

என்பதை தங்களின் தேசிய கொள்கையாக’ 

ஏற்க உறுதிமொழி எடுத்துக்கொண்டன. ஆனால் 

இவ்வுறுதிமொழியை பின்பற்றாத நாடுகள் மீது 

நடவடிக்கை எடுக்குமளவிற்கு பன்னாட்டு சங்கம் 

அதிகாரம் கொண்டிருக்கவில்லை.

ஹிட்லர் பதவியேற்ற 1933ஆம் ஆண்டு 

ஜெனீவாவில் பன்னாட்டு சங்கம் ஆயுதக்குறைப்பு 

மாநாடு ஒன்றை நடத்தியது. பிரான்சிற்கு 

இணையாக ஜெர்மனியும் மறுஆயுதமயமாக்கல் 

கோரிக்கை விடுத்ததே பிரச்சனையாக எழுந்தது. 

பிரெஞ்சுக்காரர்கள் இந்த கோரிக்கைக்கு உடன்பட

மறுத்துவிட்டனர், அதே நேரத்தில் பிரிட்டன் 

ஜெர்மனியின் கோரிக்கையை ஏற்கத் தயாராக

இருந்தது. பிரான்சின் மறுப்பிற்கு பதிலடியாக

ஹிட்லர் அம்மாநாட்டிலிருந்தும், பன்னாட்டு 

சங்கத்திலிருந்தும் ஜெர்மனியை விலக்கிக்

கொண்டார். தனது முடிவை பொது வாக்கெடுப்பிற்கு 

உட்படுத்திய ஹிட்லருக்கு சாதகமாக ஜெர்மானிய 

மக்களின் பெரும் ஆதரவு குவிந்தது. இதனால் 

ஊக்கமடைந்த ஹிட்லர் மார்ச், 1935இல் கட்டாய 

இராணுவ சேவையை வலியுறுத்தி அதன் 

வாயிலாக ஐந்து லட்சம் என்ற பெரும் அளவிலான 

எண்ணிக்கையில் இளைஞர்களைக் கொண்ட

இராணுவத்தை உருவாக்கப் போவதாக

அறிவித்தார். இந்நிகழ்வே வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் 

மீறப்பட்ட முதல் செயலாக அமைந்தது. பிரிட்டன், 

பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் 

பன்னாட்டு சங்கத்தில் கூடி ஜெர்மனியின் 

போக்கைக் கண்டித்தனவேயன்றி வேறு எதுவும் 

செய்யமுடியவில்லை. பிரிட்டன் ஜெர்மனியோடு 

கப்பற்படை ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்

கொள்ள முனைப்புக் காட்டியது. அதன்படி, 

பிரிட்டனின் கப்பற்படை கட்டுமானப் பணிகளில் 

35 சதவீதம் வரை ஜெர்மனி பெறுவதற்கு வாய்ப்பு 

ஏற்படுத்தப்பட்டது. இத்தாலி எத்தியோப்பியா மீது 1935இல் 

படையெடுத்தது. பேரரசர் ஹேல் செலாஸி (Haile 

Selassie) பன்னாட்டு சங்கத்தில் முறையிட்டும் எந்தப்

பயனும் இருக்கவில்லை.


1930களில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தம் :


இரண்டாம் உலகப்போர் துவங்க முக்கியமான 

பொருளாதார காரணம் பெருமந்தமே ஆகும். 

பெருமந்தம் பொருளாதார தேசியவுணர்வை

அதிகப்படுத்தியது. வேலைவாய்ப்பின்மையாலும், 

தொழில் தேக்கத்தாலும் பாதிக்கப்பட்ட அரசுகள் 

இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிக

வரியைத் திணித்து அதன் வாயிலாக உள்நாட்டில் 

தயாரிக்கப்பட்ட பொருட்களின் நுகர்வையும் அதை

சார்ந்த சந்தையையும் பாதுகாக்க முனைந்தன. 

இதன் விளைவாக, விரிவாக்க கொள்கைக்கு 

வழியேற்படுத்தியதோடு பிரச்சனையைத் தீர்க்க

அண்டை நாடுகள் மீது படையெடுப்பதே தீர்வு 

என்ற நிலைக்கு கொண்டுசென்றது. இதன் 

முதல் நகர்வை ஜப்பானே மேற்கொண்டது. 

அது 1931இல் உலகப் பொருளாதார சிக்கலை

எதிர்கொள்ள சீனாவில் மஞ்சூரியாவின் வடக்குப்

பகுதிகளை ஆக்கிரமித்தது. ஜப்பானிய ஏற்றுமதியில் 

பட்டுத்துணிக்கான மூலப்பொருட்களும் பருத்தி 

ஆடைகளும் எதிர்கொண்ட சரிவை நிலைப்படுத்த

மஞ்சூரியாவை ஆக்கிரமித்தால் அதை சந்தையாக

மாற்றிக்கொள்ளலாம் என்று ஜப்பானிய 

இராணுவவாதிகள் அறிவுறுத்தியதால் அந்நாடு 

போர் நடவடிக்கையில் இறங்கியது


ஜெர்மானிய பெரு வியாபாரிகளின் எதிர்பார்ப்பும், 
தேசப்பற்றாளர்களின் மனக்குறையும் :


பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடு 

மற்றும் சோவியத் நாடு ஆகியவை உலகத்தின் 

பெரும் நிலப்பரப்புகளை தங்களின் காலனிகளாகக்

கொண்டிருந்தன. ஐரோப்பிய கண்டத்தில் பெரும் 

தொழிற்தேசமான ஜெர்மனியோ காலனிகள் ஏதும் 

கொண்டிருக்கவில்லை. இதுவே ஜெர்மனியின் 

பெருவியாபார அமைப்புகளை வெர்செய்ல்ஸ் 

ஒப்பந்தத்தின் கூறுகளை உடைக்க த் 

தூண்டுவதாக அமைந்தது. ஜெர்மனி போலந்திடம் 

இழந்த பகுதிகளையும் ஜெர்மன் மொழி பேசும்

ஆஸ்திரிய நாட்டையும் சூடட்டன்லாந்து என்ற

செக் நாட்டு எல்லையில் அமைந்தபகுதிகளும் 

ஜெர்மனியோடு இணைத்துக்கொள்ள விரும்பியது. 

நாஜி ஆட்சியில் பெருவியாபார அமைப்புகளும், 

நாஜி கொள்கைகளும் இணக்கமானப் போக்கைக்

கொண்டிருந்தன. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்க ஐக்கிய

நாடு மற்றும் சோவியத் நாடு ஆகியவற்றின் 

சாம்ராஜ்யம் பூமியின் நிலப்பரப்பில் நான்கில்

ஒரு பகுதியை உள்ளடக்கியதாக இருந்தது. 

ஒப்பீட்டளவில் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்

ஆகியவை சிறியனவாகவே தோன்றின.

ஜெர்மானிய தேசபக்தி கொண்டோர் ஒரு 

ஜெர்மானியனின் வாழ்விடமாக சராசரியாக .004 

சதுர மைல்களே உள்ளது என்பதையும், அதே

வேளையில் சராசரியாக ஒரு பிரிட்டானியனால்

ஏகாதிபத்தியத்திற்கு உட்பட்ட மூன்று சதுர 

மைல்களில் உள்ள வளங்களையும், பொருளாதார

வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது

என்பதனையும் சுட்டிக்காட்டினார்கள். 


ஸார் பகுதியை ஜெர்மனியோடு இணைத்தது:


வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின்படி ஜனவரி 

1935இல் ஸார் பகுதியில் பொது வாக்கெடுப்பு 

நடத்தப்பட வேண்டும். அப்பகுதி மக்கள் தாங்கள் 

ஜெர்மனியுடனோ, பிரான்சுடனோ அல்லது 

பன்னாட்டு சங்கத்தின் கட்டுப்பாட்டிலோ இருக்கப்

போவதை அவர்களே முடிவுசெய்ய வேண்டும். 

வாக்களித்தவர்களில் தொன்னூறு சதவீத நபர்கள் 

ஜெர்மனியோடு இணைவதையே விரும்பினார்கள். 

அதனால் மார்ச் 1935இல் ஸார் பகுதி ஜெர்மனியோடு 

இணைக்கப்பட்டது. இது ஹிட்லருக்கு பெரும் 

மனவலிமையை ஊட்டியது. 


ரைன்லாந்து இணைக்கப்படல் :


வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் ஜெர்மனி 

தனது இராணுவத்தை ரைன்லாந்தில் இருந்து 

விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டதையும் 

மீறி 1936இல் ஹிட்லர் மீண்டும் அப்பகுதியில் 

இராணுவத்தை குவிக்கலானார். பிரெஞ்சுக்காரர்கள் 

கண்டித்திருந்தால் ஜெர்மானியர்கள் பின்வாங்கி 

இருக்கக்கூடும். பிரெஞ்சுப் படைபலம் ஜெர்மனியை

காட்டிலும் வலுவாக இருந்தாலும் பொருளாதாரப்

பெருமந்தம் ஏற்படுத்திய பாதிப்பும், அதனால் அரசியல் 

நிலையற்றத்தன்மையால் ஏற்பட்ட பாதிப்பால் 

பிரதம அமைச்சரான எடூவார்ட் டலாடியர் (Edouard 

Daladier) பதவி விலகுமளவிற்கு சென்றதாலும் 

பிரான்சினால் வெர்செய்ல்ஸ் ஒப்பந்த முறிவில் 

ஜெர்மனி ஈடுபட்டதை எதிர்க்க வலிமையற்று 

இருந்தது. 


ஆஸ்திரியாவை ஜெர்மனியோடு 
வலுக்கட்டாயப்படுத்தி இணைத்தது :

ஹிட்லர் ஆஸ்திரியாவில் பிறந்ததால் அது 

ஜெர்மனியின் ஒருபகுதியாக இருப்பதையே

அவர் விரும்பினார். ஹிட்லர் ஆஸ்திரிய பிரதம 

அமைச்சரான ஸ்கூஸ்னிக்கை (Schuschnigg) 

பிப்ரவரி 1938இல் பவேரிய ஆல்ப்ஸ் மலையில் 

இருந்த நகரான பெர்க்டஸ்காடனுக்கு 

(Berchtesgaden) கலந்துரையாடும் நிமித்தமாக

அழைத்தார். அந்நிகழ்வில் ஆஸ்திரிய பிரதம 

அமைச்சர் நாஜி கட்சியை அவர் நாட்டில் 

அங்கீகாரமளிக்கவும் அந்நாட்டுப் பொருளாதாரத்தை

ஜெர்மனியோடு இணைக்கவும் தவறினால் 

படையெடுப்பை எதிர்கொள்ளநேரிடும் என்றஒற்றை

தெரிவு வழங்கப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டார். 

ரோம்-பெர்லின் அச்சின் உருவாக்கத்தோடு 

ஆஸ்திரியா இத்தாலியின் ஆதரவை இழந்திருந்தது. 

வேறு வழி தெரியாத ஸ்கூஸ்னிக் அந்த முதல் 

தெரிவை ஏற்றுக்கொள்ள உடன்பட்டார். ஹிட்லரின் 

நிர்ப்பந்தத்தால் இது குறித்துப் பொதுவாக்கெடுப்பு 

நடத்தப்போவதாக வெளியிடப்பட்டதனை

புறந்தள்ளிய ஆஸ்திரிய பிரதம அமைச்சர், 

அந்நாட்டில் நாஜி அரசை ஏற்படுத்தினார். அதன்பின் 

ஜெர்மானிய படைகள் வியன்னாவிற்குள் நுழைந்து 

அந்நாட்டின் மீது கட்டுப்பாட்டை நிறுவ ஆரம்பித்தன


சூடட்டன்லாந்து ஆக்கிரமிப்பு  :


ஐரோப்பாவின் முக்கிய சக்திகளிடமிருந்து 

எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளாத ஹிட்லர்

தனது பார்வையை செக்கோஸ்லோவாக்கியா

மீது திருப்பினார். ஜூன் 1938இல் ஹிட்லர்

சூடட்டன்லாந்தை ஆக்கிரமிக்கும் தனது 

நோக்கை இராணுவத்திற்கு ஆணைகள் 

வாயிலாக தெரிவித்தார். சூடட்டன்லாந்தில் வாழும் ஜெர்மானியர்கள்

மிக மோசமாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பது போன்றதொருப்

பிரச்சாரத்தை தெளிந்த முறைமையுடன் 

நாஜி கட்சிப் பரப்பியது. பிரான்சையும், 

செக்கோஸ்லோவாக்கியாவையும் கலந்து பேசிய 

பிரிட்டிஷ் பிரதம அமைச்சர் நெவில் சாம்பர்லின், 

பாதிக்கு மேல் ஜெர்மானிய மக்கள் தொகையை

உள்ளடக்கிய பகுதிகளை ஜெர்மனியிடம் 

ஒப்படைக்க இசைந்தார். ஆனால் போரை

விரும்பிய ஹிட்லரோ அதை ஏற்க மறுத்தார். இது 

குறித்த பொதுவாக்கெடுப்பை நடத்துவதையும் 

அவர் விரும்பவில்லை. அதனால் அத்தகையப்

பொதுவாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னரே

அவர் சூடட்டன்லாந்தை தனது இராணுவத்தை

கொண்டு ஆக்கிரமித்தார். 


மூனிச் ஒப்பந்தம் :


லண்டனில் எழுந்தப் பெருவாரியான 

எண்ணவோட்டம் ஹிட்லருக்கு எதிரான போரை

நாடியதாகவே இருந்தது. ஆனால் சாம்பர்லினும், 

பிரெஞ்சு பிரதம அமைச்சரும் ‘சமரசப்படுத்தல்’ 

(appeasement) என்ற கொள்கையை முன்னிறுத்தி 

எவ்வாறாயினும் அமைதியை நிலைநிறுத்த

முயன்றனர். அதைத் தொடர்ந்து நடந்த மூனிச் 

மாநாட்டில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் 

இத்தாலி ஆகிய நாடுகளின் பிரதம அமைச்சர்கள் 

கூடிப்பேசி ஹிட்லர் அக்டோபர் 1இல் நிர்ப்பந் தித்தது 

போல சூடட்டன்லாந்தை ஜெர்மானியப்

படைகள் ஆக்கிரமித்துக் கொள்ளலாம் என்றும் 

செக்கோஸ்லோவாக்கியாவின் பகுதிகளை

போலந்திற்கும், ஹங்கேரிக்கும் பிரித்துக் கொடுப்பது 

என்றும் முடிவு செய்யப்பட்டது.


Comments

Popular posts from this blog

Zompiercer v0.103 PC Games Download

Zompiercer v0.103 PC Games Download Zompiercer v0.103 PC Games Download Title: Zompiercer Genre: Action, Adventure, Indie, Early Access Developer: DDDimanN Publisher: DDDimanN Release Date: 3 Apr, 2020 About This Game Zompiercer is a first-person shooter in the world of zombie apocalypse, filled with dangerous uniquely mutated zombies craving your flesh. Travel by train, which has become a haven for you, equip living wagons and create new equipment to survive. System Requirements Minimum: Requires a 64-bit processor and operating systemOS: Windows 7 or higher (64-bit)Processor: 2.4 Ghz Dual Core CPUMemory: 6 GB RAMGraphics: 2 GB Dedicated MemoryDirectX: Version 11Storage: 2 GB available spaceSound Card: Sound Card: DirectX® Compatible Recommended: Requires a 64-bit processor and operating systemOS: Windows 7 or higher (64-bit)Processor: 3.0 Ghz Quad Core CPU or fasterMemory: 12 GB RAMGraphics: 4 GB Dedicated MemoryDirectX: Version 11Storage: 2 GB available spac...

Counter Strike: Global Offensive v1.37.4.2 Full Edition 2020 - Download

Counter Strike: Global Offensive  v1.37.4.2 Full Edition 2020 - Download Counter Strike: Global Offensive  v1.37.4.2 Full Edition 2020 - Download Counter Strike: Global Offensive  v1.37.4.2 Full Edition 2020 - Download Year: 2019 Genre: Action Developer: Valve Corporation and Hidden Path Entertainment Publisher : Valve System requirements: Operating system: Windows XP SP3 / Vista / 7 SP1 / 8.1 / 10 Processor: Pentium 4 3 GHz or dual core from Intel 2 GHz / AMD64X2 Memory: 1 GB (XP) / 2 GB (Vista / 7 / 8.1 / 10) Video Card: 128 MB VRAM compatible with DirectX 9.0 and the technology to support Pixel Shader 2.0b Sound card: compatible with DirectX 9.0c Free space on hard drive: 23 GB Publication Type: Informal Language: Multilingual Sound language: English Description: Counter-Strike: Global Offensive - the new multiplayer first-person shooter, designed to deepen and refine the very command game mechanics "five by five," for which all come...

Adobe Lightroom Classic 2020 v9.2.1 (x64) Final Patched Download

Adobe Lightroom Classic 2020 v9.2.1 (x64) Final Patched Download Adobe Lightroom Classic 2020 v9.2.1 (x64) Final Patched Download Description Edit and organize your photos with the app that’s optimized for desktop. Lightroom Classic gives you powerful one-click tools and advanced controls to make your photos look amazing. Easily organize all your photos on your desktop, and share in a variety of ways. Features Your photos don’t always reflect the scene the way you remember it. But with Lightroom Classic, you have all the desktop editing tools you need to bring out the best in your photographs. Punch up colors, make dull-looking shots vibrant, remove distracting objects, and straighten skewed shots. Plus, the latest release offers improved performance so you can work faster than ever. With better performance under the hood, Lightroom Classic lets you import photos, generate previews, and move from Library to Develop Module in record time. Use range masking tools to ea...